ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ''என்னுள்ளில் எம்எஸ்வி.,'' எனும் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா இன்று நடத்துகிறார். சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் எம்எஸ்வி., படங்களில் இருந்து இளையராஜாவுக்கு பிடித்த சிறந்த பாடல்களை பாட இருக்கிறார் இளையராஜா. அததோடு இந்தப்பாட்டில் எம்எஸ்வி அவர்கள் எந்தமாதிரியான இசை நுணுக்கங்களையும் பயன்படுத்தினார் என்பதையும் விளக்க இருக்கிறார் இளையராஜா.
தனது ஜீவா அறக்கட்டளை மூலமாக நடத்தும் இந்த இசை நிகழ்ச்சியில் வரும் வருமானத்தை வைத்து எம்எஸ் விஸ்வநாதன் அவர்களின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்க எண்ணியிருக்கிறார் இளையராஜா. இதற்கு எம்எஸ்வி குடும்பத்தாரிடமும் பேசி வருகிறார் இளையராஜா. அவ்வாறு அமையும் இந்த அறக்கட்டளை இரண்டு பேரை நியமித்து அதை நிர்வகிக்க இருக்கிறார்.
விளம்பரங்களை தவிர்த்த இளையராஜா
இதனிடையே இன்று நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு பல்வேறு விளம்பரங்கள் முன்வந்தன. ஆனால் அவற்றை எல்லாவற்றையும் இளையராஜா வேண்டாம் என்று தவிர்த்து விட்டார். ஒருவருக்கு விளம்பரம் கொடுத்து மற்றவரை கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை என்பது இளையராஜாவின் கருத்து.