காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
நடிகர் சூர்யாவை அவரது அப்பா சிவகுமார் எளிமையான வாழ்க்கையை பழகிக் கொள்ளும்படிதான் வளர்த்திருக்கிறார். பள்ளிக்குக்கூட பஸ்ஸில்தான் அனுப்பியுள்ளார். பலருடைய வாழ்க்கைக் கதைகளைக் கூறி வழிகாட்டியிருக்கிறார். அப்போது நூறுபடங்களுக்கும் மேல் நடித்து அப்பா சம்பாதித்த பணத்தையும் புகழையும் இப்போது பத்து படங்களிலேயே சம்பாதித்து விட்டார் சூர்யா. அப்பாவிடம் கவர்ந்தது எது என்று சூர்யாவிடம் கேட்ட போது...
"அப்பாவைப் பின்பற்றி வாழ்வது அவ்வளவு கடினம், ஏனென்றால் அவ்வளவு விஷயங்களை கடைப்பிடிப்பவர் அவர். நாங்கள் ஏதோ முடிந்ததை பின்பற்றி வருகிறோம். அப்பாவிடம் நான் வியப்பது அவரது ஞாபக சக்தி. இந்த விஷயத்தில் நான் கம்மிதான். படிப்பில் கூட நான் சராசரி மாணவன்தான். அவரது நேர்த்தி, நேரம் தவறாமை கண்டு வியப்பேன். திட்டமிடல் பிடிக்கும், வெளியூர் செல்ல நேரும் போது பெட்டியில் என்னென்ன வைக்க வேண்டும் என்று குண்டூசி முதல் பட்டியல் போடுவார். போனில் யாருடனாவது பேசப்போகிறார் என்றால் மறந்து விடக் கூடாது என்று பேச வேண்டிய விஷயத்தைக் கூட குறித்து வைத்துக் கொள்வார். இப்படி நான் அப்பாவிடம் வியப்பவை நிறைய உண்டு என்கிறார் சூர்யா.