விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தெருநாய்களை கொல்வதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் வெளியாகிவரும் இந்த நேரத்தில், திரையுலக பிரபலங்கள் சிலர் தெருநாய்களை கொல்லவேண்டாம் என குரல் எழுப்பியுள்ளனர்.. ஆனால் மலையாள நடிகர் மோகன்லாலோ மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தெருநாய்களை கொன்றாகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. அது தவிர்க்க முடியாதது என கூறியுள்ளார். மேலும் தெருநாய்களின் எண்ணிக்கையை வளரவிடாமல் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மோகன்லாலின் கருத்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷால், தெருநாய்களை கொல்லக்கூடாது, ஒவ்வொருவருக்கும் உயிர்வாழும் உரிமை இருக்கிறது என அவற்றின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த 'ஸ்டாப் கில்லிங்க் டாக்ஸ்' என்கிற வாசகத்தை ஒரு அட்டையில் எழுதி அதை பிடித்தபடி புகைப்படம் எடுத்து ஆன்லைனில் பதிவிட்டுள்ளார். ஆனால் விஷாலின் இந்த செயலே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. மலையாள ரசிகர்களில் பலர் பேஸ்புக்கில் விஷாலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
“நாய்கள் கொல்லப்பட கூடாது என அவற்றின் மீது போலி அன்பு கட்டும் விஷால், அதேபோல தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வரும் ரசாயனம் கலந்த காய்கறிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதையும் கவனத்தில் வைத்து குரல் கொடுப்பாரா” என கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். ஒருவர் ஒருபடி மேலேபோய் விஷால் வைத்துள்ள ஸ்லோகன் அட்டையில் 'ஸ்டாப் கில்லிங் மலையாளீஸ்' என மாற்றி எழுதி, அதையும் பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.. பாவம்.. தெருநாய்கள் விவகாரத்தில் குரல் கொடுக்கப்போய் ரசாயன காய்கறி விவகாரத்தில் மாட்டிக்கொண்டாரே விஷால்.