ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருடா திருடி சுப்பிரமணியசிவா இயக்கிய யோகி படத்தில் ஹீரோவானார் டைரக்டர் அமீர். அதையடுத்து மீண்டும் படம் இயக்கியவர், மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா என்ற பாடலில் நீது சந்திராவுடன் இணைந்து குத்தாட்டமாடினார்.
இந்நிலையில், தற்போது பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பரத் நடித்த 555 படத்தில் நடித்த மிருத்திகா அமீருக்கு ஜோடியாக நடிக்கிறார். 2013ல் தொடங்கப்பட்ட இப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அரசியல் சார்ந்த கதையில் உருவாகும் இந்த படத்தில் முந்தைய படங்களை விட அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அமீர், பாடல் காட்சிகளிலும் மிருத்திகாவுடன் இணைந்து கலக்கலான நடனமாடிக் கொண்டிருக்கிறாராம்.