ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமீபகாலமாக, பல்வேறு பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். முன்னதாக ஒப்பந்தம் ஆகியிருந்த "செக்ஷன் 84" படத்திலிருந்தும் தற்போது அவர் விலகியுள்ளார். அப்படத்தில், பாலியல் தொழிலாளி கேரக்டரில், கரீனா கபூர் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த கரீனா கபூர் கூறியதாவது, வழக்கமான கேரக்டர்களில் அல்லாமல், ஆக்ஷன் கேரக்டர்களில் தனக்கு நடிக்க விருப்பம் என்றும், அதுபோன்ற கதைகளை தான் தற்போது தேடிக்கொண்டிருப்பதாகவும், அது கிடைக்கும்வரை காத்திருக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். கரீனா கபூர், ஷாகித் கபூர், அலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள உத்டா பஞ்சாப் படம், 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.