ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
1988-ல் கமல் நடித்த சத்யா படம் மூலம் இயக்குனரானவர் சுரேஷ் கிருஷ்ணா. பின்னர் ரஜினி நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா என பல மெகா படங்களை இயக்கினார். பா.விஜய் நடித்த இளைஞன் படம்தான் அவருக்கு கடைசி படமாகியது. பின்னர் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சமீபகாலமாக அவர் டிவி சீரியல்கள் இயக்கிக்கொண்டிருக்கிறார்.
அதனால் மீண்டும் சினிமாவுக்கு வரும் ஆசை அவருக்கு இல்லாமலேயே இருந்தது. ஆனால், சமீபத்தில் பாட்ஷா-2 கதையை அவர் அஜித்தை வைத்து இயக்குவதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இந்த செய்தி அவரது காதுக்கு சென்றபோது அதிர்ச்சியடைந்து விட்டாராம். அதையடுத்து தன்னை நோக்கி பாய்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அப்படி எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மறுத்தார்.
ஆனபோதும், இப்போது அவருக்கு மீண்டும் படம் இயக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். பாட்ஷா-2 கதையை ரஜினியிடம் சொன்னபோது, அந்த படத்தின் 2ம் பாகத்தில் நடித்தால் அதைவிட மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும். ஆனால் பாட்ஷாவுக்கு இணையாக இன்னொரு ஹிட்டை கொடுக்க முடியாது அதனால் அந்த முயற்சியை விட்டு விடலாம் என்று கூறி விட்டாராம்.