ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற பின் பாபி சிம்ஹா மாறிவிட்டார் என்ற தகவல்கள் கோலிவுட்டிலிருந்து அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறது. சில முன்னணி இளம் ஹீரோக்களால் வாங்க முடியாத தேசிய விருதை தான் வாங்கிவிட்டதாக அவர் பெருமையுடன் பேசிக் கொள்வதாகவும் சொன்னார்கள். ரஜினிகாந்த் வேறு அவரை அழைத்து '16 வயதினிலே' பரட்டையைப் பார்த்தது போலவே உங்களது நடிப்பு இருந்தது என்று சொன்னதால் தன்னையும் அடுத்த ரஜினிகாந்த் போலவே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
அதன் ஒரு கட்டமாக இப்போது தமிழ்த் திரையுலகத்தின் இன்றைய வசூல் மன்னனாக இருக்கும் விஜய்யுடன் மோத பாபி சிம்ஹா தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. விஜய் நடித்து சுமார் 80 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 'புலி' திரைப்படம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளிவர உள்ளது. அதே தினத்தில், தான் நடித்துள்ள 'கோ 2' படத்தையும் வெளியிடுமாறு பாபி சிம்ஹா, தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறாராம். விஜய் இதுவரை நடித்துள்ள படங்களிலேயே 'புலி' படத்தை அதிக செலவுடனும், பிரம்மாண்டத்துடனும் எடுத்துள்ளார்கள். அந்தப் படத்துடன் போட்டி போட முடியாது என்று பலரும் தங்களது வெளியீட்டை முன்னதாகவே, பிறகோ தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள்.
ஆனால், 'கோ 2' படத்தை அன்றைய தினத்தில் வெளியிடுவது சரியல்ல என்றே வினியோகஸ்தர்கள் சொல்கிறார்களாம். 'பாகுபலி' படம் தெலுங்கில் வெளியாவது தெரிந்தும், அந்த படத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அங்கு சூப்பர்ஸ்டாராக உள்ள மகேஷ்பாபு அவருடைய படத்தையே தள்ளி வைத்துவிட்டார். அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். இங்கோ கதை வேறுவிதமாக இருக்கிறது. இருந்தாலும் பாபி சிம்ஹாவுக்கு தைரியம் அதிகம்தான்.