ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது இதற்கு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள்,தொழில் நுட்பக் கலைஞர்கள் என யாரும் விதிவிலக்கில்லை. ரஜினி, கமல், விஜய் முதல் வடிவேலு வரை முன்னணி நடிகர்களும் இளையராஜா தொடங்கி அனிருத் வரை இசையமைப்பாளர்களும் இதில் அடக்கம்.
கமல், தகனம் நடந்த மயான மைதானத்தில் இரண்டரை மணிநேரம் இருந்தார். இவை எல்லாம் பேசப்பட்டது போல அனைவராலும் பேசப்பட்ட முணு முணுக்கப்பட்ட இன்னொரு செய்தி அஜீத் இதில் கலந்து கொள்ள வரவில்லை என்பதுதான்.
அஜீத் ஊரில் இல்லை என்றாலும் இரங்கல் செய்தியாவது வெளியிட்டு இருக்கலாமே. சமீபத்திய ஆண்டுகளில் அஜீத் எந்த நிகழ்ச்சிகளுக்கும் வெளியே வருவதில்லை. சம்பந்தமில்லாத ரசிகர்களே திரளாக வந்து அஞ்சலி செலுத்திய போது அஜீத் மட்டும் ஏன் வரவில்லை? இத்தனைக்கும் அவர் நடித்த காதல் மன்னன் படத்தில் எம்.எஸ்.வி. தோன்றி நடித்தும் படத்தின் விளம்பரத்துக்கு உதவியிருக்கிறார். எம்.எஸ்.வி.நடித்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
எம்.எஸ்.விக்கு மட்டுமல்ல இயக்குநர் சிகரம் பாலசந்தர் மறைந்த போதும் அஞ்சலி செலுத்தவோ இரங்கல் தெரிவிக்கவோ அஜீத் வரவில்லை. பாலுமகேந்திரா மறைந்த போதும் அஞ்சலி செலுத்தவோ இரங்கல் தெரிவிக்கவோ வரவில்லை. .
ரஜினி, கமலே அவர்கள் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு தவறாமல் வருகிறார்கள். மீடியாக்களுடன் உரையாடுகிறார்கள்.ஆனால் சமீப ஆண்டுகளில் அஜீத் தனது படத்தின் ப்ரமோஷனுக்கும் வருவது கிடையாது. தன் படத்து விளம்பரம் ப்ரமோஷன் எல்லாவற்றுக்கும் வரவேண்டியது ஒரு கதாநாயகனின் பொறுப்பு அல்லவா?
ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன் என வட இந்தியாவிலிருந்தெல்லாம் ப்ளைட் பிடித்து சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு தவறாமல் வருகிறார்கள். ஆனால் அஜீத் எதிலும் கலந்து கொள்வதில்லை. இப்படி தவிர்ப்பது சரியா? இனியாவது அவர் போக்கில் மாற்றம் வருமா?