ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மைனா, கும்கி, கயல் படங்களை அடுத்து தனுஷை வைத்து மெகா பட்ஜெட்டில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் பிரபுசாலமன். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். மணிரத்னத்தின் அலைபாயுதே படம் போன்று இந்த படத்தின் காதல் கதையும் முழுக்க முழுக்க ரயில் பயணத்தின்போதுதான் நடக்கிறது.
அதனால் இந்த படத்துக்காக ஒரு ரயில் வண்டியை வாடகைக்கு பிடித்து படமாக்கும் அவர், முன்னதாக, சென்னை மீனம்பாக்கத்தில் ஒரு பிரமாண்டமான ரயில்வே ஸ்டேஷன் செட் உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஸ்டேசனான ரயில் கடந்து செல்லும்போதும் ஒரு ஸ்டேசனில் நிற்கும். அப்படி நிற்பது போன்ற பல ஸ்டேசன் வடிவில் இந்த செட் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஸ்டேசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை இங்கு படமாக்கி விட்டு,அதையடுத்து அவுடோருக்காக வடஇந்தியாவிலுள்ள மலைப்பிரதேசங்களில் ரயில் செல்லும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் படமாக்குகிறார் பிரபுசாலமன். ஏற்கனவே அவுட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆரம்பத்தில் படமாக்கி வந்தவர், இப்போது தனுஷ்-கீர்த்தி சுரேஷ் இருவருமே தனது படத்தில் நடிக்க வந்து விட்டதால் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இந்த ரயில்வே ஸ்டேஷசன் செட்டில் தற்போது படமாக்கி வருகிறார்.