ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெருக்கூத்தை நாடகங்கள் காலி பண்ணியது. நாடகத்தை சினிமா காலி பண்ணியது. சினிமாவை தொலைக்காட்சிகள் காலி பண்ணிவிடுமோ என்று பயந்த காலங்கள் ஒன்று உண்டு. அந்த அளவிற்கு தொலைக்காட்சியின் வீச்சு இருந்தது. பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனால் புற்றுநோய் உள்ளிருந்து உயிரைக் குடிப்பதுபோல் சின்னத்திரை சினிமாவை செல்லரித்து நிற்கிறது என்பது கசப்பான உண்மை.
பெட்டிக்குள் போய்விட்ட பழைய திரைப்படங்களுக்கு சின்னத்திரை உயிரூட்டி இருக்கிறது. சின்னத்திரை இல்லை என்றால் சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும் கூட வருங்கால சந்ததி மறந்து விடும். பழைய படங்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்து நடமாட விட்டிருப்பது சின்னத்திரைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நிகழ்கால சினிமாவை, நடைமுறை சினிமாவை சின்னத்திரை விட்டு வைக்கவில்லை.
ஆரம்பத்தில் சின்னத்திரைக்கும், பெரிய திரைக்கும் இணக்கான சூழ்நிலையே இருந்தது. சினிமாவை மக்களிடம் விளம்பரம் மூலமாகவும், நிகழ்ச்சிகள் மூலமாகவும் கொண்டு சென்றது சினிமாதான். அதோடு திரைப்படங்களை நல்ல விலை கொடுத்து வாங்கி. தயாரிப்பாளர்களுக்கு கூடுதலாக ஒரு வருமானத்தையும் கொடுத்து வந்தது. இதனால் தயாரிப்பாளர்கள் சின்னத்திரையை கொண்டாடினார்கள்.
ஒரு காலத்தில் ஒரு படத்தின் பூஜையின்போதே படத்தை சின்னத்திரை வாங்கி விடும். அந்த பணத்தை கொண்டு படத்தை ஆரம்பித்தார்கள். ஒரு படத்தை ஒரு குறிப்பிட்ட சேனல் வாங்கிவிட்டால் அந்தப் படத்துக்கு மதிப்பும் கூடி விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கினார்கள்.
மிகப்பெரிய படங்களை பண்டிகை காலங்களிலும், சிறிய படங்களை முக்கிய விடுமுறை நாட்களிலும் ஒளிபரப்பி அதில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மூலம் நல்ல லாபத்தை அடைந்தன சேனல்கள்.
காலப்போக்கில் சேனல்ககள் பெருகியது. ஒரு திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் 25 லட்சத்திலிருந்து 20 கோடி வரைக்கும் சென்றது வரலாறு. இவ்வளவு பெரிய தொகை கொடுத்து சிறிய சேனல்களால் படத்தை வாங்க முடியாது என்றாலும் அந்த சேனல்கள் 5 லட்சம், 10 லட்சம் கொடுத்து தியேட்டர்களில் சில நாட்களே ஓடிய படத்தை வாங்கி சமாளித்து வந்தது.
இந்த நிலைமை இப்போது அடியோடு மாறிவிட்டது. எந்த சேனலும் கடந்த 6 மாதமாக எந்த படத்தையும் வாங்கவில்லை என்கிறார்கள். தொலைக்காட்சிக்கு இத்தனை கோடிக்கு படத்தை விற்கலாம் என்று பட்ஜெட் போட்டவர்களால் இப்போது அப்படி போட முடியவில்லை. பெரிய திரைப்படங்களை வாங்கிய சேனல்களும் தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் இரண்டு பெரிய படங்களை வாங்கி திரையிட்டால் போதும் என்கிற முடிவுக்கு வந்துவிட்ட மாதிரி தெரிகிறது. "எங்களுக்கு விளம்பர வருமானம் குறைந்து விட்டது. தயாரிப்பாளர்கள் அதிக பட்ஜெட்டில் படம் எடுத்துவிட்டு எங்களிடம் அதிக பணம் கேட்கிறார்கள். அதனை எங்களால் எப்படித் தரமுடியும். அதோடு இப்போது ஒரு புதிய படத்தை நாங்கள் சின்னத்திரையில் ஒளிபரப்புவதற்கு முன்பே அந்தப் படத்தை திருட்டு விசிடி, இணைய தளம் மூலமாக மக்கள் பார்த்து விடுகிறார்கள்.
அதனால் எத்தனை பெரிய படத்தை ஒளிபரப்பினாலும் மக்கள் தொலைக்காட்சி முன் உட்காருவது குறைந்து விட்டது. அதனால் அதிக விலை கொடுத்து வாங்கி ஒளிபரப்பி நாங்கள் நஷ்டமடைய வேண்டியதிருக்கிறது" என்பது தொலைக்காட்சி தரப்பு வாதம்.
"ஒரு தொலைக்காட்சியில் 40 சதவிகித புட்டேஜ் சினிமா தொடர்புடையதுதான். பெரும்பாலான நிகழ்ச்சிகளில் சினிமா நட்சத்திரங்கள்தான் பங்கேற்கிறார்கள். சீரியல்களிலும் சினிமா நட்சத்திரங்கள்தான் நடிக்கிறார்கள். இப்படி சினிமாவையே மூலதனமாக கொண்டு செயல்படும் தொலைக்காட்சிகள் திரைப்படங்கள் வாங்குவதில் லாப நஷ்ட கணக்கு பார்க்க கூடாது. படத்தை வாங்குவதை தார்மீக கடமையாக கருத வேண்டும். சினிமா இல்லாமல் செய்தி சேனல் வேண்டுமானால் நடத்தலாமே தவிர எண்டர்டெயின்மெண்ட் சேனல் நடத்தவே முடியாது" என்பது பெரியதிரை தரப்பு வாதம்.
கடந்த 6 மாதமாக சேனல்கள் படங்கள் வாங்காததால் கடும் அதிர்ச்சியில் உள்ள தயாரிப்பாளர் சங்கம் விரைவில் திரைப்படங்களை வாங்கும் சேனல்களுக்கே அந்த படத்தின் பாடல்கள், காட்சிகள் வழங்குவது என்று தீர்மானித்து அதை செயல்படுத்த இருப்பதாக தெரிகிறது. சேனல்கள் சங்கம் வருகிற டிசம்பர் மாதம் வரை எந்த படங்களையும் வாங்குவதில்லை என்று தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி சினிமாவில் இரு முக்கிய சக்திகள் எதிர்ரெதிர் அணியில் திரண்டு நிற்பது தற்போது படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவுக்கு இது ஆரோக்கியமற்ற சூழ்நிலை என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இருதரப்பும் பிடிவாதங்களை தளர்த்தி, அரசியல் கலப்பின்றி, தொழில் போட்டியின்றி, பாரபட்சமின்றி உட்கார்ந்து பேசி இதற்கொரு நிரந்தர தீர்வை எட்டினால் மட்டுமே சின்னத்திரை, பெரிய திரை இரண்டின் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ரசிகனுக்கு சினிமா மட்டுமே பொழுதுபோக்கல்ல. பொழுது போக்கில் சினிமாவும் ஒன்று அவ்வளவுதான். அது இல்லாவிட்டால் அவன் கவலைப்படபோவதில்லை என்பதை இரு தரப்பினரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சினிமா பார்வையாளர்களின் கருத்து.