சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சுசீந்திரனால் அறிமுகம் செய்யப்பட்டவர் விஷ்ணு. அதன்பிறகு பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இடம் பொருள் ஏவல், வீரதீரசூரன், போடா ஆண்டவனே என் பக்கம் மற்றும் எழில் இயக்கும் படம் என நான்கைந்து படங்கள் அவர் கைவசம் உள்ளன. இந்த நிலையில், பல வருடங்களாக மீடியாக்களை சந்திக்காத விஷ்ணு நேற்று தனது பிறந்த நாள் என்பதால் பத்திரிகையாளர்களை சந்தித்து, கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அதையடுத்து, என் பெயரை விஷ்ணுவிஷால் என்று மாற்றிய பிறகு இப்போதுதான் நான் மீடியாக்களை சந்திக்கிறேன் என்று சொல்லி பெயரை மாற்றியதற்கான காரணத்தை சொன்னார்.
எனது நிஜப்பெயர் விஷால். ஆனால் நான் நடிக்க வந்தபோது விஷால் என்றொரு நடிகர் இருந்ததால் விஷ்ணு என்று மாற்றிக்கொண்டு நடித்தேன். ஒரு கட்டத்தில் விஷ்ணுவுடன் விஷாலையும் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் எனது நிஜப்பெயரையும் சேர்த்துக்கொண்டேன்.
அதுபற்றி நான் எனது நண்பர் விஷாலிடம்சொன்னபோது, அவர் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. அதனால் விஷ்ணு விஷாலாகி விட்டேன். மேலும், சினிமாவில் என்னை அறிமுகம் செய்த சுசீந்திரனும், நீர்ப்பறவை படத்தில் என்னை நன்றாக நடிக்க வைத்த சீனுராமசாமியும் எனது குருநாதர்கள். நான் இன்றைக்கு 8 படங்களில் நடித்து ஒரு நடிகனாக பீல்டில் இருக்கிறேன் என்றால் அவர்கள்தான் காரணம்.
மேலும், இப்போது சீனுராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள இடம்பொருள்ஏவல் படத்தில் விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளேன். இதில் எங்கள் இருவருக்குமே சமமான ரோல்கள்தான். அதேசமயம் எனக்கு சண்டை காட்சிகள் இல்லை. ஆனால் விஜயசேதுபதிக்கு 2 சண்டைகாட்சிகள் உள்ளன.
நீர்ப்பறவை படத்திற்கு பிறகுதான் நடிப்பின் மீது எனக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டது. நம்மாலும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க முடியும் என்கிற தைரியமும் வந்தது. அதனால் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடிக்கத் தொடங்கினேன். அதையடுத்துதான் ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்கள் கிடைத்தன.
சினிமா உலகைப்பொறுத்தவரை எனக்கு விஷால், ஆர்யா, விக்ராந்த் என்ற பல நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களில் விக்ராந்துக்கும் எனக்கும் கிரிக்கெட் ஆடும்போது பெரிய போட்டி ஏற்படும். அதே சமயம் நான் சோர்ந்திருக்கும்போது எனக்கு நிறைய எனர்ஜி கொடுத்தவரும் அவரே. அடுத்து விஷால். எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் வந்து நிற்பார். சினிமாவைப்பற்றி நிறையபே பேசிக்கொள்வோம்.