ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்திற்குள் உயரமான இடத்திற்கு வந்திருப்பவர் கானா பாலா. தனக்கு பணமும், புகழும் போதும் மற்ற கானா பாடர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்கிறார் கனா பாலா. மேலும் அவர் கூறியதாவது:
நான் சாவு வீட்டுல பாடிக்கிட்டிருந்தேன். என் நண்பன் ரஞ்சித் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்தான். நான் நினைக்காததெல்லாம் எனக்கு கிடைச்சது. எனக்கு மட்டுமல்ல என் மனைவிக்கு என் குடும்பத்துக்கு எல்லாருக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைச்சுது. வேண்டிய அளவுக்கு பணம் கிடைச்சுது. சினிமாவுக்கு மட்டும் இதுவரை 75 பாடல் எழுதியிருக்கேன். 300 பாடல்கள் பாடியிருக்கேன்.
என் தகுதிக்கு இதுவே அதிகம். பாடல் எழுதுவதையும், பாடுவதையும் குறைத்து விட்டேன். என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் செய்கிறேன். இது எனக்கு போதும் 200 கானா பாடகர்கள் சென்னையில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று இசை அமைப்பாளர்களிடம் கேட்டு வருகிறேன். இதுவரை இரண்டு மூன்று விருதுகள் வாங்கி இருப்பேன். இனி அரசு விருது தவிர வேறு விருதுகளை வாங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
இப்போது வேளாங்கண்ணி மாதா பற்றிய ஆல்பம் ஒன்றை பாடி வருகிறேன். அடுத்து நாகூர் ஆண்டவர் பற்றிய ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறேன். அதன் பிறகு அய்யப்பன் பாட்டு ஆல்பம் ஒன்று இப்படி ஆன்மீகம் பக்கம் திரும்பியிருக்கிறேன். அது மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது. இப்போது பெண்களை கிண்டல் செய்தோ, குறைத்து மதிப்பிட்டோ பாடல் எழுதுவதில்லை. அவர்களுக்கு அறிவுரை கூறியே பாடல் எழுதுகிறேன். என்றார் கானா பாலா.