பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்த 'வாலு' திரைப்படம் நாளை வருவதாக இருந்தது. ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கும், படத்தின் உரிமையை வாங்கியவருக்கும் இடையே எழுந்த பணப்பிரச்னையில் உரிமை வாங்கியவர் வழக்கு தொடர்ந்ததால் நீதிமன்றம் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதித்தது. இதனால் 'வாலு' படத்தின் வெளியீடு மீண்டும் நீண்டு போக ஆரம்பித்துவிட்டது.
இதனிடையே, 'வாலு' படம் வெளிவராத காரணத்தால் சிம்புவின் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாக சிம்புவே அவருடைய டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார். சிம்புவின் டுவீட்டை நேற்று பார்த்ததும் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. ஒரு படம் வெளிவராததற்கு அப்படி எந்த ரசிகர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார், இப்படியெல்லாம் கூடவா ரசிகர்கள் இருப்பார்கள், அவர்களின் மடத்தனமான செயலுக்கு அளவே இல்லையா என்று யோசிக்க வைத்தது.
இதுகுறித்து சிம்பு டுவீட் செய்துள்ளதாவது, ““ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற தகவல் அறிந்து என்னுடைய இதயமே உடைந்து போய்விட்டது. அதனால் நான் இப்போது அழுது கொண்டிருக்கிறேன். ரசிகர்களே, தயவு செய்து வலிமையாக இருங்கள். உங்களை என்றும் விழ வைத்து விடமாட்டேன்.
நான் ஏற்கெனவே உடைந்து போயிருக்கிறேன், மன வலிமையுடன் இருக்க முயன்று வருகிறேன். இந்த சமயத்தில் இது மாதிரியெல்லாம் செய்யாதீர்கள். உங்கள் அன்பை விட எனக்கு எதுவும் பெரிதல்ல,” என கூறியிருக்கிறார்.