பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
வழக்கு எண் 18/9ல் அப்பாவித் தோற்றத்தில் வந்து இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று நினைக்குமளவுக்கு தோன்றியவர் மனிஷாயாதவ். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா படங்களில் நடித்தார். இப்போது த்ரிஷா இல்லனா நயன்தாரா வரவுள்ளது. அடுத்து ஒரு குப்பைக்கதை உருவாகி வருகிறது. மனிஷா பற்றி ஒரு குப்பைக் கதை படக்குழு பாராட்டி வருகிறது. இயக்குநர் அஸ்லாம் தான் படத்தை தயாரிக்கிறார். இயக்கம் காளிரங்கசாமி.
மனிஷா பற்றி இயக்குநர் காளிரங்கசாமி கூறும்போது இப்படத்தில் மனிஷா ஏழைப் பெண்ணாக வருகிறார். அவர் நடிப்பில் எவ்வளவோ முன்னேறியுள்ளார். அவரது ஆறாவது படம் இது. அதற்குள் எவ்வளவு மாற்றம், முன்னேற்றம். இப்படத்தின் கேரக்டரில் நடிக்க வைக்கப் பல நடிகைகளை பரிசீலித்து இவரைத் தேர்வு செய்தோம். மெயிலில்தான் கதைச்சுருக்கம் அனுப்பினோம். படித்துவிட்டு பத்து நிமிடத்தில்போன் செய்தார். பெங்களூர் போய் முழுக்கதை சொன்னோம். நடிக்க ஒப்புக் கொண்டார். கதை வசனத்தை ஒருமாதம் முன்பே தங்கிலீஷில் டைப் செய்து அனுப்பி விட்டோம். படப்பிடிப்புக்கு பக்காவாக மனப்பாடம் செய்து தயாராக வந்து நடித்தார் என்று மனிஷாவை மனிஷாகொய்ராலா அளவுக்குப் புகழ்கிறார்.