மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கேரளாவில் இரண்டு பார்வதிகள் இருக்கிறார்கள். பூ பார்வதி நாயர், உத்தம வில்லன் பார்வதி மேனன். இரண்டு பார்வதிகளும் தமிழ் சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மூன்றாவதாக ஒரு பார்வதி மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார். மலையாள குணசித்ர நடிகர் ரத்தீஷின் மகள் பார்வதி. மதுரா நரங்கா என்ற படத்தில் அறிமுமாகிறார். ஏற்கெனவே இரண்டு பார்வதிகள் இருப்பதால் தனது பெயரை பார்வதி ரத்தீஷ் என் வைத்துக் கொண்டிருக்கிறார்.
முதல் படத்திலேயே குஞ்சாகோ போபன், பிஜு மேனன் என அப்பா வயதுடைய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரமிக்க வைக்கிறார். கதை துபாய், மலேசியா, சிங்கப்பூரில் நடக்கிறது. குஞ்சாகோ போபனும், பிஜு மேனதும் மலேசியாவில் கால் டாக்ஸி டிரைவர்கள். உயிருக்கு உயிரான நண்பர்கள். இவர்கள் வாழ்க்கையில் பார்வதி நுழைந்த பிறகு என்ன நடக்கிறது என்கிற லவ் திரில்லர் கதை. ஆர்டினரி படத்தை இயக்கிய சுகீத் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு பிறகு பார்வதி மலையாள சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். அவரது பெரிய கண்களும், தீர்க்கமான பார்வையும் சக்தி மிக்கதாக இருக்கிறது என்று மலையாள மீடியாக்கள் வர்ணிக்கிறது. சேச்சி அப்படியே தமிழுக்கு வந்துவிடுவார்.