ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த்தாய் வாழத்தான, நீராரும் கடலுடுத்த... பாடலுக்கு இசை அமைச்சவரும் இவரே. 1965ல், இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில், போர் முனைக்கே சென்ற குழுவோடு சென்று, கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டி, காயமுற்ற வீரர்களுக்காக பாடி உற்சாகப்படுத்திவர் விஸ்வநாதன்.
உலக இசையை தமிழில் புகுத்தியவர்
உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை இவரையே சாரும். எகிப்திய இசையை, பட்டத்து ராணி, பெர்சியன் இசையை நினைத்தேன் வந்தாய் நூறு வயது; ஜப்பானிய இசையை பன்சாயி காதல் பறவை; லத்தீன் இசையை யார் அந்த நிலவு; ரஷ்ய இசையை கண் போன போக்கிலே கால் போகலாமா; மெக்சிகன் இசையை முத்தமிடும் நேரமெப்போபாடல்களிலும் கொண்டு வந்தனர்.
20 நிமிடங்களில் இசையமைத்தவர்
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ பாடல், 20 நிமிடங்களில் இசையமைக்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை, சேலத்தில் மேடையேற்றியவரும் இவர்தான்.