ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் விக்ரமன் தலைமையில் சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள துணை இயக்குனர்கள், இயக்குனர்கள் வாய்ப்பை பெறுவதற்காக அவர்கள் தங்களுக்கான விசிட்டிங் கார்டாக குறும்படங்கள் எடுக்க உதவி செய்கிறது. சங்கத்திற்கு சொந்தமாக 5 நவீன டிஜிட்டல் கேமராக்கள் உள்ளது. எடிட்டிங், டப்பிங் யூனிட் உள்ளது. ப்ரிவியூ தியேட்டர் உள்ளது. போட்டோ ஸ்டூடியோவும் உள்ளது. இதனை பயன்படுத்தி உதவி இயக்குனர்கள் குறும்படம் எடுக்கலாம்.
அதன்படி இதுவரை 50க்கும் மேற்பட்ட குறும்படங்களை துணை இயக்குனர்கள் எடுத்துள்ளார்கள். மேலும் 20 படங்கள் தயாரிப்பில் உள்ளது. இந்த படங்களை பொது மக்களுக்கு கொண்டு செல்லவும், துணை இயக்குனர்களின் திறமையை வெளிப்படுத்தவும். நாளைய இயக்குனர் போன்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்த இயக்குனர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக சிலாட் கேட்டு முன்னணி சேனல்களை அணுகியுள்ளது.
"இயக்குனர்கள் சங்கம். திறமையான இயக்குனர்களை அடையாளம் காட்டவும், திறமையான துணை இயக்குனர்களுக்கு ஒரு களம் அமைத்து கொடுக்கவுமே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். எங்கள் இயக்குனர்கள் எடுத்த குறும்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறோம். இதற்கு சிலாட் வாங்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார் இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன்.