ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செகண்ட் இன்னிங்சில் 49ஓ என்ற படத்தில் நாயகனாக நடித்தார் கவுண்டமணி. விவசாயியாக அவர் நடித்துள்ள அந்த படம் எப்போதோ ரிலீசாக வேண்டியது. ஆனால் அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. பின்னர் வாய்மை என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். 49ஓ படத்தில் வேஷ்டி, கோவணம் என்று காஸ்டியூம அணிந்து நடித்த கவுண்டமணி, இந்த வாய்மை படத்தில் கோட்சூட் அணிந்து நடித்துள்ளார்.
ஆனால், இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தும் என்ன காரணமோ இன்னமும் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், அந்த படங்களைத் தொடர்ந்து எங்களுக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்றொரு படத்திலும் நடித்தார் கவுண்டர். படப்பிடிப்புகளுக்கு கேரவன் வாடகைக்கு விடுபவராக அவர் நடித்துள்ள அந்த படம் தொடங்கியபோது, அதேபெயரில் அதாவது, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்றொரு பெயரில் இன்னொரு படமும் தயாரானது.