சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஓ காதல் கண்மணி படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்ததால் உற்சாகமாகிவிட்டார் மணிரத்னம். ஓ காதல் கண்மணியின் வெற்றியை மக்கள் மறந்து போவதற்குள் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டாராம். இதற்கிடையில் மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர். அந்த அடிப்படையில் கார்த்தியை அணுகி இருக்கிறாரா?
அதுதான் இல்லை...மணிரத்னத்தின் அடுத்தப் படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தான். அந்தப் படத்தில் கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வழக்கம்போல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, மீண்டும் இணைகிறார் பி.சி. ஸ்ரீராம். இந்தப் படத்தை தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இயக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம். ஓ காதல் கண்மணி படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்ட ஸ்டுடியோகிரீன் நிறுவனம், மணிரத்னம் இயக்க உள்ள படத்தை தானே தயாரிப்பதாக அணுகியது.
மணிரத்னம் மறுத்துவிட்டாராம்.