ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசனின் மனதுக்கு நெருக்கமான படமாக 'பாபநாசம்' படம் அமைந்துவிட்டது போலும், படத்தை வெற்றிப் படமாக்கியதற்காக, நாளை பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இதற்காக சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. மலையாளத்தில் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்காக வெளிவந்துள்ள 'பாபநாசம்' படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளுக்கும் மேல் படம் வெளியாகியது. பல திரையரங்குகளில் கடந்த நான்கு நாட்களிலேயே படத்தின் தயாரிப்புச் செலவையும் மீறி படம் வசூலித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோகன்லாலுடன் ஒப்பீடு, மீனா இடத்தில் கௌதமி, மலையாளத்தை இயக்கிய அதே இயக்குனர், திருநெல்வேலி தமிழ் என இந்தப் படத்தைப் பற்றி பலரும் பல்வேறு விதங்களில் சமூக வலைத்தளங்களில் கார சாரமாக விவாதித்தனர். சமீபத்தில் ஒரு படத்தை இந்த அளவிற்கு விவாதித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அவையெல்லாவற்றையும் மீறி படம் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியின் மேடையில் 'பாபநாசம்' படத்தில் வந்துள்ள காவல் நிலையம், கமல்ஹாசனின் வீடு ஆகியவற்றை உருவாக்கப் போவதாகவும் தெரிகிறது. அந்த அரங்கிலிருந்துதான் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளாராம். இதை வழக்கமான நன்றி நவிலல் சந்திப்பாக இல்லாமல் வித்தியாசமாக நடத்த கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.