'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் மக்காஏல மக்கா ஏல -என்ற ஹிட் பாடலை எழுதிய ப்ரியன், அதற்கடுத்து அதே விஜய்ஆண்டனி இசையமைத்த நடித்த சலீம் படத்திலும் மஸ்காரா போட்டு மயக்குறியே என்ற பாடலை எழுதினார். இந்த இரண்டு குத்துப்பாடல்களுமே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அவரிடத்தில் மெலோடியை விட குத்துப்பாடல்கள் எழுதுவதில்தான் நீங்கள் ஸ்பெசலிஸ்டா? என்று கேட்டால், அப்படி எதுவும் இல்லை. எல்லாவிதமான சூழலுக்கும் நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
கோலிசோடா படத்தில் நான் எழுதிய ஜனனம் ஜனனம் -என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதேபோல் பல மெலோடி பாடல்களை பல படங்களில் எழுதியிருக்கிறேன். இப்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் பிச்சைக்காரன் படத்தில் சில அற்புதமான மெலோடி டியூனுக்கு பாடல் எழுதியிருக்கிறேன். மேலும், என்னைப்பொறுத்தவரை என்னை அதிகம் பாதித்த கவிஞரான வாலியைப் போன்று எல்லாவிதமான சூழலுக்கும் பாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது எதிர்கால திரையிசைப்பாடல்களின் பயணம் வாலியை பின்பற்றியே இருக்கும் என்கிறார் பாடலாசிரியர் ப்ரியன்.