பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சிக்கும் பேய்ப்படம் இயக்குவதில் மட்டுமல்ல தயாரிப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. தற்போது அரண்மனை படத்தின் பார்ட் - 2 படத்தை ஹாரர் படமாக இயக்கி வருகிறார் சுந்தர்.சி. அப்படத்தைத் தொடர்ந்து தனது அவ்னிசினிமேக்ஸ் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்றுதான்... ஹலோ நான் பேய் பேசுகிறேன்... என்ற பேய்ப்படம்.
வைபவ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஹலோ நான் பேய் பேசுகிறேன்.. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பேயாக நடிக்க இருப்பதும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் என்ற தகவலும் அடிபடுகிறது. இதுவரை வந்த பேய்ப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவகையில் இந்தப் பேய்ப்படம் இருக்க வேண்டும் என திட்டமிட்ட சுந்தர்.சி. அதற்காக வித்தியாசமான கதையைப் பிடித்திருக்கிறாராம்.
அதாவது குறிப்பிட்ட செல்போனிலிருந்து யாருக்கெல்லாம் அழைப்பு வருகிறதோ... அந்த நபர் கொல்லப்படுகிறார். இதுதான் ஹலோ நான் பேய் பேசுகிறேன்.. படத்தின் ஒருவரிக்கதை. சில வருடங்களுக்கு முன்னால் 'ஒன் மிஸ்டுகால்' என்ற பெயரில் ஆங்கிலப்படம் வெளியானது. அதன் உட்டாலக்கடி தான் ஹலோ நான் பேய் பேசுகிறேன் படம் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் உலவுகிறது.