விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும், வினியோகத்தும் உள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் 'மாப்பிள்ளை சிங்கம்'. இந்தப் படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் இன்னும் படமாக்க வேண்டியுள்ளதாம். ஆனால், அஞ்சலி கால்ஷீட் தராமல் இழுத்தடித்து படத்திற்கு சிக்கலைத் தருவதாகச் சொல்கிறார்கள். அஞ்சலி கால்ஷீட் தராத காரணத்தால் இந்த மாதம் வெளிவந்தாக வேண்டிய படத்தை மேலும் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம்.
ஆனால், அஞ்சலியே வேறு விதமான தகவலைச் சொல்கிறார். இந்தப் படத்திற்காக 50 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். ஆனாலும், திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தாமல் எனது கால்ஷீட்டை வீணாக்கி விட்டார்கள் என்கிறார். வேண்டுமானால் கால்ஷீட் தருகிறேன், ஆனால், படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாராம். அதற்கு தயாரிப்பாளர் தரப்பு தயாராக இல்லை என்றும் சொல்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகம் மறந்து போன அஞ்சலியை 'மாப்பிள்ளை சிங்கம்' படத்தின் மூலம் மீண்டும் அழைத்து வந்ததே அந்தத் தயாரிப்பு நிறுவனம்தான். அதற்கு அஞ்சலி தரும் பரிசு இதுதானா என்கிறார்களாம் அவர்கள். இதனால் அஞ்சலியை மீண்டும் தமிழில் ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்களாம்.