ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செங்காத்து பூமியிலே படத்தில் நாயகனாக நடித்தவர் மிர்ச்சி செந்தில். அதையடுத்து கண்பேசும் வார்த்தைகள், ரொம்ப நல்லவன்டா நீ, பப்பாளி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் நடித்த அவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதோடு, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமானவரான செந்தில், தற்போது சினிமா நடிகராகி விட்டதால் இனிமேல் எந்த டிவி தொடரிலும் நடிக்கப்போவதில்லையாம். அதேசமயம், என்னதான் சினிமாவில் பிசியான நபரானபோதும் சென்னை ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக இருப்பதை மட்டும் விடமாட்டாராம் செந்தில். காரணம், அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது இந்த வானொலிதானாம். அதோடு, இப்போது அவர் நடிகராகி விட்டபோதும், அவரது தொகுப்பாளர் நிகழ்ச்சிக்காக அவர் அந்த அலுவலகத்துக்கு செல்ல வேண்டியதே இல்லையாம். தான் பேச வேண்டியதை ரெக்கார்ட்டிங் செய்து அனுப்பி வைத்தாலே போதுமாம், அதற்கு மட்டும் மாதம் இரண்டரை லட்சம் அவருக்கு சம்பளம் வருகிறதாம்.