சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பெரும்பாலும் முன்னணி ஹீரோக்கள் தங்களை சுற்றித்தான் கதை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கதாநாயகிகளை தொட்டுக்கொள்ளும் கவர்ச்சி ஊறுகாயாகத்தான் பயன்படுத்த சொல்வார்கள். ஆனால் இந்த விசயத்தில் நிறையவே விட்டுக்கொடுக்கிறார் ஜெயம்ரவி.
குறிப்பாக, ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவுக்கே தன்னை விட பிரதான கேரக்டர் என்றபோதும், அதை அவர் பெருசுபடுத்தவில்லை. இதற்கெல்லாம் மேலாக, அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹன்சிகா தலைகாட்டாத போதும், அவர் தன்னை விட சிறப்பாக நடித்திருந்ததாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். இந்த மாதிரி கதாநாயகிகளின் நடிப்பை எந்த ஹீரோக்களும் இத்தனை ஓப்பனாக இதுவரை சொன்னதில்லை.
இந்த நிலையில், அடுத்தபடியாக அப்பாடக்கர் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி, அந்த படத்தில் நடித்துள்ள த்ரிஷா-அஞ்சலி இருவரில் த்ரிஷாவின் நடிப்பை புகழ்ந்து பேசி வருகிறாராம். சில காட்சிகளை குறிப்பிட்டு இந்த மாதிரியெல்லாம் இப்போது நடிப்பதற்கு ஆர்ட்டிஸ்ட் இல்லை. அது த்ரிஷாவினால் மட்டுமே முடியும் என்று அவர் இல்லாத நேரத்தில் சொன்னாராம். விசயம் த்ரிஷாவின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து, இப்படி கதாநாயகிகளின் நடிப்பை பெருமையாக சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது ஜெயம்ரவியிடம் உள்ளது என்று பதிலுக்கு அவரை புகழ்ந்து தள்ளினாராம்.