ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனன்யா, எங்கேயும் எப்போதும் உள்பட பல படங்களில் நடித்து வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும்போது திடீரென்னு தன் தந்தை வயதுள்ள ஆஞ்சநேயலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அருக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் வாய்ப்புகள் குறைந்திருப்பது உண்மைதான். அதற்கு காரணம் நான் யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்பதில்லை. மானேஜர்கள் வைத்து வாய்ப்பு தேடுவதும் இல்லை. அனன்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேடிவருகிற கேரக்டர்களில் மட்டும் நடிக்கிறேன். என் கணவர் சினிமாவில் நடிக்க எந்த தடையும் சொல்லவில்லை. அவர் சொன்னது யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்காதே என்பதுதான். அதை நான் கடைபிடிக்கிறேன். அனன்யா குறிப்பிட்ட சில கேரக்டருக்குதான் பொருத்தமாக இருப்பார் என்று தமிழ் இயக்குனர்கள் முடிவு செய்திருக்கலாம். என்னால் மார்டன் கேரக்டரிலும் நடிக்க முடியும். அதற்கான வாய்ப்பு வந்தால்தானே செய்து காட்ட முடியும்.