ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமா டிஜிட்டலுக்கு முழுமையாக மாறிவிட்டது. சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து பவர் ஸ்டார் படம் வரைக்கும் அனைத்தும் டிஜிட்டலில்தான் உருவாக்கப்படுகிறது. என்றாலும் பிலிமில் உருவாக்கப்படும் படங்களில் இருக்கும் நேர்த்தி டிஜிட்டலில் இல்லை என்று சொல்வார்கள். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் முழுக்க முழுக்க பிலிமில் உருவாக்கப்பட்டது.
தற்போது ஜெயம்ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் தனி ஒருவன் படம் பிலிமில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார். தம்பி ராமைய்யா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
"இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் இதில் காட்சிக்கான முக்கியத்தும் அதிகம் இருப்பதை உணர்ந்து இதை பிலிமில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும், சிரமமும் அதிகம் என்றேன். பட்ஜெட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சிரமத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டார்கள்" என்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.