விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இரண்டு ஊருக்கிடையே பகை. ஆனால் அந்த இரண்டு ஊர்களைச்சேர்ந்த ஒரு பையனும், பெண்ணும் காதலித்து விடுவார்கள். அப்போது இரண்டு ஊருக்கும் பொதுவானராக இருக்கும் சிங்கம்புலி அந்த காதலர்களை எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் இந்த, யோக்கியன் வர்றான் சொம்பை தூக்கி உள்ளவை படத்தின் கதை என்கிறார் அப்படத்தை இயக்கியுள்ள சுவாமிராஜ். மேலும், வடிவேலு நடித்த இம்சை அரசின் 23ஆம் புலிகேசிக்கு பிறகு இந்த படம் பார்க்க வரும் ரசிகர்களும் படம் தொடங்கி முடிகிற வரைக்கும் சிரித்துக்கொண்டேதான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சீன் பை சீன் காமெடிதான். அந்த வகையில், 23ஆம் புலிகேசிக்கும், இந்த யோக்கியன் வர்றான் சொம்பை தூக்கி உள்ளவை படத்துக்குமிடையே உள்ள ஒரே வித்தியாசம் அது ஒரு பீரியட் பிலிம். இது ஒரு சமூகப்படம் அவ்வளவுதான். மற்றபடி சிரிப்புக்கு நூற்றுக்கு நூற்றி ஐம்பது சதவிகிதம் கியாரண்டி உள்ளது என்கிறார்.
அதோடு, இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தைச்சேர்ந்த ஒரு மாதிரி கிராமத்தில் நடத்தப்பட்டதாக பெருமையாக சொல்கிறார் இயக்குனர் சுவாமிராஜ். அவர் அதுபற்றி மேலும் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள ஜமீன் தேவர் குளம்தான் அந்த மாதிரி கிராமம். இந்த ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டு, குத்து என்று போலீசுக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் புதிதாக வந்த பஞ்சாயத்து தலைவர் ஊரையே அமைதிப்பூங்காவாக மாற்றி விட்டார். எனது சொந்த ஊரும் இதுதான்.
இந்த மாதிரி கிராமத்தில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளது. அதோடு மைக் செட் ரேடியோக்களும் ஊரில் பல இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஏதாவது முக்கியமான விசயம் என்றால் இதில் தெரிவித்தால் உடனடியாக ஊர் முழுக்க செய்தி பரவி விடும். மேலும், இந்த ஊரில் ஒரு இடத்தில்கூட குப்பை இருக்காது. ஊரில் ஏதாவது விழாக்கள் என்றாலும் யாரும் மது அருந்த மாட்டார்கள். அருந்தியவர்கள் விழாக்களுக்கு வரமாட்டார்கள். கழிப்பறையை பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக ஜாதி, கட்சி கொடிகள் இல்லாத கிராமம் இந்த ஜமீன் தேவர் குளம் கிராமம்தான்.