மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
தானு வெட்ஸ் மனு, ராஞ்சனா, தானு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். சமீபத்தில் வெளிவந்த தானு ரிட்டர்ன்ஸ் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார் ஆனந்த். இந்த மகிழ்ச்சியோடு கடந்தசில நாட்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளையும் கொண்டாடினார். இதனிடையே ஆனந்த் எல்.ராய்யின் அடுத்தப்படம் எந்தமாதிரி இருக்கும் என்று அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ஆனந்த்.எல்.ராய் அளித்துள்ள பேட்டி ஒன்றில், என்னுடைய கதைகள் தான், ஹீரோக்களிடம் என்னை அழைத்து செல்லும். இதில் எந்த சிரமமும் எனக்கு இல்லை. நான் எப்போதும் ஹீரோக்களுக்காக கதை எழுத மாட்டேன், என் கதைகள் எப்போதும் ஹீரோவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.