ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டியநாடு படத்தில் வைரமுத்து, டி.இமான் கூட்டணியில் பாடல்கள் வெற்றி பெற்றன. அதனால் அதே கூட்டணி விஷால் நடிக்கும் பாயும்புலி படத்திலும் தொடர்கிறது. படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. மதுரைப் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் மதுரைக்காரர் வைரமுத்துக்கு எழுத சொல்ல வேண்டுமா என்ன? ஐந்து பாடல்களும் விதவிதமாக வெவ்வேறு கருத்துகளை சொல்லும்படி உள்ளனவாம். அதில் ஒரு பாடல் வருகிறது. மருத மருதக்காரி வெள்ளயன எதுத்தா.. புலிய புலியக் கூட மொறத்தால அடிச்சா என்கிற அந்தப் பாடலுக்கு மரக்காணம் அருகே ஒரு பிரமாண்ட செட் போட்டுப் படமாக்கியுள்ளனர். விஷால் காஜல் நடித்துள்ளனர். இன்னொரு பாடலைப் பின்னி மில்லில் செட் போட்டு எடுத்துள்ளனர். இதில் குத்துப் பாட்டு ஆடும் குத்து விளக்குகளின் உரிமைகள் பற்றி எழுதியுள்ளாராம் வைரமுத்து. குத்துப்பாடல் ஆடும் பாத்திரங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று சொல்கிறதாம் அந்தப் பாடல்.