ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் வெளியான பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் சாய் தரன் மற்றும் நடிகை ரெஜினா நடித்திருந்தனர். அதே ஜோடி தற்போது மீண்டும் இணைந்து சுப்ரமணியம் பார் சேல் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் இப்படத்தின் திரையிடும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை எஸ்.வி.சி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜு தயாரிகின்றார். அமெரிக்காவில் இப்படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் இப்படத்தில் நடிகை அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ராமைய்யா வஸ்தாவைய்யா படம் தோல்வியை தழுவியது. இதனால் ஸ்டைலான காதல் கதை அம்சம் கொண்ட சுப்ரமணியம் பார் சேல் படத்தின் மீது இயக்குநர் ஹரீஷ் சங்கர் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.