ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷப் பல் பிடுங்கப்பட்ட பாம்பை சினிமாவில் ஹீரோக்கள் படு ஸ்டைலாக பிடித்து வீராப்பு காட்டுவார்கள். ஆனால் சரத்குமார் நிஜ பாம்பை பொதுமக்கள் மத்தியில் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நேற்று சரத்குமார் தி.நகரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திலிருந்து தனது மனைவியின் தயாரிப்பு அலுவலககமான ராடான் டி.விக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற ரோட்டில் கடும் டிராபிக் ஜாம். என்னவென்று விசாரித்தார் சரத்குமார். சாலையோரத்தில் ஒரு பாம்பு கிடக்கிறது. அதனால் எல்லோரும் பயந்து நிற்கிறார்கள் சிலர் அதை அடித்துக் கொல்ல முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இதைக் கேட்டதும் காரில் இருந்து இறங்கிய சரத்குமார் பாம்பு இருந்த இடத்துக்குச் சென்றார். ஒரு பொந்துக்குள் நுழைந்திருந்த பாம்பை ஒருவர் குச்சியால் குத்தி கொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தார். அருகில் சென்ற சரத்குமார், அவரிடமிருந்த குச்சியை பிடுங்கி எறிந்து விட்டு பொந்துக்குள் கைவிட்டு பாம்பை பிடித்து வெளியே எடுத்தார். அது ஒரு பச்சை பாம்பு. பின்பு எல்லோரையும் கலைந்து போகச் சொல்லிவிட்டு அருகில் இருந்த புதருக்குள் அதை விரட்டி விட்டார். பின்னார் காரில் ஏறி அலுவலம் சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.