ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் கார் விபத்தில் சிக்கியது, படுகாயத்துடன் அவர் உயிர் தப்பினார். நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி நேற்று தனது தொகுதியான மதுராவிலிருந்து ஜெய்ப்பூருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சர்வீஸ் சாலையிலிருந்து ஒரு கார் திடீரென மெயின் சாலைக்குள் நுழைந்தது. இதனால் ஹேமமாலியின் காரும், சாலையில் நுழைந்த காரும் பயங்கரமாக மோதியது.
காரின் முன் சீட்டு கம்பி ஹேமமாலினியின் முகத்தில் குத்தி கிழித்தது. அவரது கார் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். விபத்து ஏற்படுத்திய காரில் 5 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். அந்த காரில் வந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். மேலும் இரண்டு பேர் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
ஹேமமாலினி மற்றொரு காரில் அழைத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பத்து தையல்கள் அவர் முகத்தில் போடப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் மும்பையில் இருந்த ஹேமமாலினி குடும்பத்தினர் ஜெய்ப்பூர் விரைந்துள்ளனர்.
இதனிடையே எதிரே வந்த காரில் பயணித்த குழந்தை பரிதாபமாக உயிர் இழந்ததால் ஹேமமாலினியின் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.