ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இப்போதுள்ள இளைஞர்களுக்கு ஆர்வமும் ஆசையும் உள்ள அளவுக்கு திறமையை தனித்துவத்தை வளர்த்துக் கொள்வதில் நாட்டம் இருப்பதில்லை என்கிறார் எம். எஸ்.பாஸ்கர். அவரை அவ்வப்போது பார்க்கும் இளைஞர்கள் நான் நடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும். மிவும் சுமாராக இருக்கும் நீங்களே நடிக்கும் போது நான் சினிமாவில் நடிக்க முடியாதா என்ன? என்று எரிச்சல் மூடடுவார்களாம். சினிமா நடிப்பைப் பற்றி அலட்சியமாகவும் பேசுவார்களாம். அப்போது சினிமாவில் நடிப்பது இருக்கட்டும் முதலில் நான் சொல்வதை திருப்பிச் சொல் பார்க்கலாம் என்று
மரமது மரத்திலேறி, மரமதைத் தோளில் சாய்த்து, மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி, மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது, மரமதைக் கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார் என்கிற பாடலைச் சொல்லி திருப்பி சொல் என்பாராம். இன்னும் சிலரிடம் நாபிறழ் பயிற்சிப் பாடல்களைப் பாடி எங்கே திருப்பிச் சொல் என்பாராம். அப்புறம் எங்கே அவர்கள் இருப்பார்கள், ஒடிவிடுவார்களாம். ஒரு தகுதியும் இல்லாமல் ஆசை மட்டுமே இளைஞர்களிடம் இருக்கிறது என்கிறார் அவர். நானே வாய்ப்பு கேட்டு அலைய வேண்டியுள்ளது. என்னிடம் வாய்ப்பு சொல்லி விடக் கேட்டு தொந்தரவு தருகிறார்கள் என்று புலம்புகிறார்.