ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் சுமார் 25 படங்களில் நடித்திருப்பவர் நிவின்பாலி. இவர் மலையாளத்தில் நஸ்ரியாவுடன் இணைந்து நடித்த படம் தமிழில் நேரம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. அந்த படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருந்தார். அப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகுதான் தமிழில் பல படங்களை நஸ்ரியா கைப்பற்றினார். அதேபோல் வில்லன் பாபி சிம்ஹாவும் ஜிகர்தண்டா படத்தில் மீண்டும வில்லனாக நடித்து புகழ் பெற்றவர். இப்போது ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களில் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு வேகமாக வளர்ந்து நிற்கிறார். ஆனபோதும், நேரம் படத்தின் நாயகனான நிவின் பாலிக்கு அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், தமிழில் நேரடியாக நடித்தே தீருவது என்று முடிவில் இருக்கும் அவர் தற்போது சில தமிழ் டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளார்.
அப்படி தான் நடிக்கும் படத்தை இரண்டு மொழிகளிலும் தயாரிக்க இயக்குனர் நினைத்தால், நிவின் பாலியோ, அப்படி வேண்டாம். நேரடியாக தமிழில் தயாரிக்கலாம். மலையாளத்தில் டப் செய்து வெளியிடலாம் என்கிறாராம். நிவின் பாலியின் பிடிவாதத்தால் தற்போது ஒரு நேரடி தமிழ்ப்படம் அவருக்கு கிடைத்திருக்கிறது.