ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனா தற்போது நடிகர் கார்த்தி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அப்படத்திற்கு பின்னர் அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் சைகோ திரில்லர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க நாகார்ஜுனா சம்மதம் தெரிவித்துள்ளார். நாகார்ஜுனா இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் துவங்கின.மேலும் இப்படத்தின் சில முக்கிய காட்சிகளை சென்னையில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை லாவண்யா திரிபதி இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். வினோத் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ராம் மோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.