ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாய்ப்பு கேட்பது பல ரகம். நடந்து சென்று சினிமா கம்பெனி கம்பெனியாய் அலைந்து போய் கேட்பதுண்டு, டூவீலரில் போய் கேட்பதுண்டு, பஸ்ஸில் சென்று கேட்பதுண்டு, ரயிலில் போய்க்கூட கேட்பதுண்டு. ஆனால் ஒரு நடிகர் ப்ளைட்டில் சென்று வாய்ப்பு கேட்டிருக்கிறார் என்றால் ஆச்சரியப்படத்தானே வேண்டும்-?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தில் நான்கு நாயகர்களில் ஒருவராக நடித்துள்ள விக்கி ஆதித்யா சென்னையில் இருப்பவர். கோவையில் படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது, நால்வரில் ஒருவர் பாத்திரத்துக்கு ஆள் தேவைப்படுகிறது என்று கேள்விப்பட்டுள்ளார். தன் படத்தை மின்னஞ்சலில் இயக்குநருக்கு அனுப்பியதும் மறுநாள் மாலை வந்து பார்க்கவும் நேரில் பார்த்தால்தான் சொல்லமுடியும் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஏ.கேசவன்.
இது பற்றி விக்கி ஆதித்யா கூறுகிறார்... "நான் சினிமா மீது ஆர்வம் கொண்டவன். மும்பை அனுபம்கெர் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்றவன். எப்படியாவது சினிமாவில் நுழைய முடியாதா என்று படாதபாடு பட்டுக் கொண்டு இருந்தேன். அந்தச் சூழலில் பல கம்பெனிகளுக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் லிங்குசாமி சாரின் மைத்துனர் சக்கரவர்த்தி என்பவர் நாளைக்கு படப்பிடிப்பு வாய்ப்பு உள்ளது உடனே செல் என்றார். இரவு முழுக்க தூங்கவில்லை, சென்னையில் காலை 7,30 க்கு ப்ளைட் பிடித்து 9,15க்கு கோவை போய் விட்டேன். இயக்குநரின் இடத்துக்கு 10 மணிக்கு படப்பிடிப்பு நடக்கும் பங்களா கார்டன் கிளப் போய் விட்டேன். சென்னையிலிருந்து வந்ததை அவர் நம்பவில்லை. ப்ளைட் டிக்கெட்டை காட்டியதும் தான் நம்பினார்
அவருக்கு நம்பமுடியாத ஆச்சரியம். எனக்குள் இருக்கும் ஆர்வத்தை எப்படி விளக்குவது என்ன சொல்வாரோ என்று எனக்குள் பரபரப்பு ஏற்பட்டது. முதலிலேயே சொன்னார் சென்னையிலிருந்து கோவை வந்ததால் ஓகே சொல்லிவிட மாட்டேன். ப்ளைட் பிடித்து வந்ததாலும் ஓகே சொல்லிவிட மாட்டேன் எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே ஓகே சொல்வேன் என்றார். நேரில் பார்த்து சில ரியாக்ஷன் கொடுக்கச் சொன்னார். பிறகுதான் அவர் ஓகே சொன்னார், அப்படித்தான் தேர்வானேன். மறுநாள் படப்பிடிப்பு, இதில் உனக்கு ஸ்லம்பாய் கேரக்டர் என்றார். சினிமவில் எப்படியும் நடிக்க வேண்டுமென்று எனக்குத் தெரியும் எந்த கேரக்டராக இருந்தாலும் நான் தயார். என்றேன்.
பேண்டைக் கழற்று லுங்கி கட்டிக்கோ என்றார் அப்படியே செய்தேன். மறுநாள் கேமராமுன் நிற்கும் வரை நான் எதுவாக நடிப்பது எனத்தெரியாது. இப்படி கூறுகிறார் விக்கி ஆதித்யா.