ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃபேன்டஸி கலந்த சரித்திரப் படமான 'புலி' படம் பற்றி கடந்த இரு நாட்களாக தேவையில்லாத வதந்தியை சில பூனைகள் பரப்பி வருகின்றன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் இந்த வதந்தி அதிகமாகவே பரவி வருகிறது.
'புலி' படத்தின் கதையா, படத்தில் ராணியாக நடிக்கும் ஸ்ரீதேவியியை எதிர்த்து நின்று ஆட்சியைப் பிடிக்கும் நாடகக் கலைஞனாக விஜய் நடிக்கிறார். இதுதான் இந்தப் படத்தின் கதை என்றும் இது தற்போதைய அரசியல் சூழ்நிலைக்குப் பொருத்தமாகப் படமாக்கப்பபட்டுள்ளது என்றும் சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள். தீயாகப் பற்றிக் கொண்ட இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், இது படத்தின் கதை இல்லையாம், விஜய்யைப் பிடிக்காத யாரோ சிலர் வேண்டுமென்றே இந்த வதந்தியை பரப்பி வருவதாகப் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கெனவே 'தலைவா' பட விவகாரத்தில் நொந்து நூலாகிப் போன விஜய், மீண்டும் அப்படி ஒரு தவறைச் செய்ய மாட்டார் என்றே கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். கடந்த வாரம் விஜய் பிறந்த நாளன்று கூட அஜித் ரசிகர்கள் விஜய்யை மட்டம் தட்டி பல மீமீக்களை வெளியிட்டார்கள். மேலும் அன்று வெளியான 'புலி' டீசர் ஒரு நாளைக்கு பத்து லட்சம் ஹிட்ஸ் என யு டியூபிலும் சாதனை படைத்து வருகிறது. எனவே, அதையெல்லாம் பிடிக்காத எதிர் முகாமில் இருக்கும் சில ரசிகர்கள் இப்படி வதந்தி கிளப்பியிருக்கவும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே 'புலி' படம் 'பாகுபலி' படத்துக்கு முன்னாடி என்ன ஆகுமோன்னு சிலர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் 'புலி'யை எப்படியாவது 'பலி' கொடுக்க முயல்வதாகவே பேசிக் கொள்கிறார்கள்.