ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை சேனலில் இருந்தபோதே தனது வார்த்தை ஜாலத்தினால்தான் பெருவாரியான நேயர்களை கவர்ந்து வந்தார். அதனால் சினிமாவுக்கு வந்த பிறகும் காமெடி என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
அதோடு, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களுக்குப்பிறகு நடித்த மான்கராத்தே படத்தில் சீரியசாகவும் நடித்தார். குறிப்பாக, வில்லனின் காலில் விழுந்தெல்லாம் நடித்தார். ஆனால் அந்த சீரியசான நடிப்பை அவரது ரசிகர்கள் லைக் பண்ணவில்லை. மாறாக, ஒரு ஹீரோ வில்லனின் காலில் விழுவதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் இப்போது ரசிகர்களின் மனதறிந்து நடிக்கத் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன், தனது ஒவ்வொரு படங்களிலும் காமெடி தூக்கலாக இருக்க வேண்டும் என்கிறாராம். குறிப்பாக, டைரக்டர்கள் காமெடி சீன் வரும் இடத்தில் காமெடி சீன் என்று மட்டுமே சொல்லிவிட, அந்த இடத்தில் எந்த மாதிரியான சீன் வைக்கலாம் என்று சூரியுடன் சேர்ந்து சிவகார்த்திகேயனும் யோசித்து சீன் வைக்கிறாராம்.
அந்த வகையில், தான் ஹீரோயினியுடன் ரொமான்ஸ் பண்ணும் காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் அனைத்திலும் ஷோலோவாக வராமல் காமெடியன்களுடன் இணைந்து தான் நடிப்பது என்றும் முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.