ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவக்குமார். இவர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி கடந்த 36 ஆண்டுகளாக ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் சிவகுமார்.
இந்த ஆண்டுக்கான, 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை'யின் 36-வது ஆண்டு நிகழ்வு, சென்னை சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ. 2,50,000 (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான 'தாய்தமிழ் பள்ளிக்கு' 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை இயக்கத்திற்கு 2 லட்சமும் வழங்கப்பட்டது.
கல்வி தான் ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சிவக்குமார்
நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார்....''1979ம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து, ப்ளஸ்-டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப்பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப்பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கேன். என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இனனும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்'' என்றார்.
அடிதட்டு மக்களின் கல்விக்கு அகரம் என்றும் உதவும் - சூர்யா
சூர்யா பேசும்போது.... ''ஒரு காரியத்தைத் தொடங்குவது பெரிய விஷயம் இல்லை. தொடங்கிய காரியத்தை தொடர்ந்து நடத்துவதுதான் பெரிய விஷயம். அப்பாவிடம், நாங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் அது. ஆரம்பிக்கும் முன்பு ஆயிரம் முறை யோசிப்பார். ஆரம்பித்துவிட்டால், அந்தக் காரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பாடுபடுவார். 36 வருஷமா நடக்கும் இந்த நிகழ்வு அதற்கு ஒரு உதாரணம். இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் எல்லாரும் சிறப்பான முறையில் கல்வி கற்றவர்கள். அதை சிறப்பு செய்யும் நிகழ்வுதான் இது.
அகரம் ஃபவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டோடு அகரம் அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 1300 பேராக உயர்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு இது சாத்தியம் இல்லை. தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். தமிழகத்தின் தரம் வாய்ந்த முக்கியமான கல்வி நிறுவனங்கள், அகரம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இலவசமாக படிக்க வாய்ப்பு தருகின்றன. தரமான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.'
மேலும், அகரம் செய்து வரும் பணிகளுக்கு, உத்வேகம் அளிக்கும் விதமாகவும், மாணவர்கள் பயன்பெறும் விதமாகவும் சென்னை கோட்டூர் பகுதியை சேர்ந்த திரு. பாண்டியன், திருமதி. சங்கரவடிவு அவர்கள் சொந்த உழைப்பில் கட்டியிருக்கும் 'திலீப்குமார் பாரடைஸ்' என்ற வீட்டை தானமாக வழங்கி உள்ளனர். இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் சூர்யா.
முன்னதாக சிவகுமாரின் மகள் பிருந்தா சிவகுமார், நிகழ்ச்சியை இறை வணக்கம் பாடி தொடங்கி வைத்தார். கார்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அகரம் ஃபவுன்டேஷனின் முன்னாள் மாணவர் தேவகுமார்.