ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெயப்பிரதா தயாரிப்பில் அவரது மகன் சித்து நடிக்கும் உயிரே உயிரே படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பாடலாசிரியர் விவேகா பேசும்போது: இயக்குனர் ராஜசேகர் என் நீண்ட நாள் நண்பர். இந்த படத்துக்கு பாட்டு எழுதும்போது ஹீரோயினை வர்ணித்து பாட்டு எழுதிக் கேட்டார். நான் பொதுவாக வர்ணித்து ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேன். அதை படித்த அவர் என் படத்தில் நடிப்பது நித்யா மேனன் இல்லை. பேரழகி ஹன்சிகா என்றார். அதன் பிறகுதான் "உலகில் இதுவரை பிறந்த பெண்களில் இவளே அழகி... உலகில் உள்ள பூக்கெளுக்கெல்லாம் இவளே தலைவி..." என்று எழுதிக் கொடுத்தேன் என்றார்.
இதன் பிறகு பேச வந்த நடிகை ஸ்ரீப்ரியா... "பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாதான் அழகி, நித்யா மேனன் அழகில்லை என்கிற தொணியில் பேசினார். ஏன் நித்யா மேனன் அழகானவர் இல்லையா? அவரும் அழகிதான். நிறம் சிவப்பாக இருந்தால்தான் அழகு என்பதில்லை" என்றார். ஸ்ரீப்ரியா இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நித்யா மேனன்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.