ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழநி மலைக்கோயிலில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையத்திற்குள் நடிகர் சிவகார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பழநியில் நடந்த திருமண விழாவிற்கு சிவகார்த்திகேயன் நேற்று வந்தார். ரசிகர்களுடன் மலைக்கோயிலுக்கு ரோப்காரில் சென்று, சுவாமி தரிசனம் செய்தார். ஏராளமான ரசிகர்கள் உடன் வந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
பின் 'வின்ச்' வழியாக கீழே இறங்கினார். அங்குள்ள அபிஷேக பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்தை பார்வையிட்டார். பழநி அடிவாரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையத்திற்குள் பணிபுரியும் நபர்களை தவிர வெளிநபர்கள் செல்ல அனுமதி இல்லை. தடை செய்யப்பட்ட இடத்தில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் சென்றுவர அனுமதித்தது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையத்திற்குள் கண்டிப்பாக யாரையும் அனுமதிக்க கூடாது. பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் இணை ஆணையர் இடம் அனுமதி பெற வேண்டும். நடிகர் சிவ கார்த்திகேயன் உள்ளே சென்று வந்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.