ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த இயக்குனர் கே.பாலந்தர் இயக்கிய மன்மதலீலை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் ஜெயப்பிரதா. அதையடுத்து கமலை வைத்து அவர் இயக்கிய நினைத்தாலே இனிக்கும் என்ற படம் ஜெயப்பிரதாவை பெரிய அளவில் பேச வைத்தது.
ஆனபோதும், பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் பரவலாக நடிக்கத் தொடங்கிய ஜெயப்பிரதா, ஒரு கட்டத்தில் தமிழை மறந்து போனார். அப்படி மறந்து போன அவரை மீண்டும் தனது தசாவதாரம் படத்தில் நடிக்க வைத்தார் கமல்.
இந்த நிலையில், தற்போது தனது மகன் சித்து என்கிற சித்தார்த்தை உயிரே உயிரே என்ற தமிழ் படத்தில் நாயகனாக அறிமுகம் செய்கிறார் ஜெயப்பிரதா. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவைச்சேர்ந்த பல பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சித்துவை வாழ்த்தி பேசினர்.
இந்த படத்தில், மூன்று ராஜசேகர்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது படத்தை இயக்கியிருப்பவர் ஒரு ராஜசேகர், படத்தின் கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர், படத்துக்கு ஸ்டன்ட் அமைத்திருப்பவர் இன்னொரு ராஜசேகர். ஆக, ஒரே பெயரில் மூன்று பெரும் டெக்னீசியன்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.