ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி' படத்தின் டிரைலர்கள், பாடல்கள் வெளிவந்த பிறகு இந்தியாவின் சிறந்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி என பலரும் பாராட்டி வருகிறார்கள். இதுவரை அந்த சிறப்புக்குரிய அடையாளத்தை தமிழ்த் திரைப்பட இயக்குனரான ஷங்கர் பெற்றிருந்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த 'எந்திரன்' படம் மகத்தான சாதனை புரிந்து தென்னிந்திய திரையுலகத்தில் வரலாறு படைத்திருந்தது.
ஆனால், தற்போது ரஜினிகாந்த் போன்று உலகப் புகழ் பெற்ற நடிகர்கள் இல்லாமல் தன்னுடைய இயக்கத்தை மட்டுமே நம்பி ராஜமௌலி உருவாக்கியுள்ள 'பாகுபலி' படம் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி, அதற்கு இணையான வியாபாரத்தையும் பெற்று வருகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஹிந்தியில் நடைபெற்றுள்ளது. அப்போது இந்தப் படத்தை ஹிந்தியில் வெளியிடும் இயக்குனர் கரண் ஜோஹர், “இந்தியாவின் சிறந்த இயக்குனர் ராஜமௌலி. அவருடைய ஒவ்வொரு படங்களையும் பார்த்து ரசித்தவன் நான். அவருடைய மிகப் பெரும் ரசிகனாக தற்போது உள்ளேன்,” என்று பாராட்டியுள்ளார். ஹிந்தித் திரையுலகின் வெற்றிகரமான இயக்குனரான கரண் ஜோஹரின் பாராட்டு 'பாகுபலி' படத்தின் மார்க்கெட்டிங் யுக்தி என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.