ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் உள்ளது. தற்போது இந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சங்கத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த சிலர் சங்கத்தில் உள்ள முக்கிய பைல்களை எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் சிலர் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சங்கத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று பெப்சி தலைவரும், ஒளிப்பதிவாளர் சங்க செயலாளருமான ஜி.சிவா தலைமையில் ஏராளமான ஒளிப்பதிவாளர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: யாரும் இல்லாத நேரத்தில் எங்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சிலர் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக நாங்கள் பாண்டிஜார் போலீசில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் சங்கத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டனர். சாவியை எங்களிடம் ஒப்படைத்து அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பெப்சி தலைவர் சிவா கூறியதாவது: சங்கத்துக்கு விரோதமாக செயல்பட்ட சிலர் கடந்த மாதம் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்கள். அவர்கள் இன்னும் சில சங்கத்தினரின் தூண்டுதலின் பேரில் எங்கள் மீது வீண் புகார்களை கூறிவருதோடு நாங்கள்தான் அட்டாக் கமிட்டி என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளார்கள். அவர்கள் மீது போலீசில புகார் அளித்திருக்கிறோம். விரைவில் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி இதற்கு ஒரு தீர்வு காண்போம்" என்றார்.