அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா மற்றும் பலர் நடிக்கும் 'பாகுபலி' படம் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. சுமார் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்னும் நடத்த வேண்டியுள்ளது. முதல் பாகத்தின் வசூலைப் பொறுத்து இரண்டாம் பாகத்திற்கு செலவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளார்கள்.
இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இதுவரை 25 சதவீதம்தான் முடிவடைந்துள்ளதாம். இன்னும் ஒரு வருட காலத்திற்குப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நிதிப் பிரச்சனை இல்லையென்றால் அதற்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டு, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இரண்டாம் பாகத்தை வெளியிடலாம் என்றும் தெரிகிறது.
இதனிடையே, இரண்டாம் பாகத்தில் தமிழ் நடிகரான சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகியுள்ளது. சூர்யா போன்ற நடிகர் இந்தப் படத்தில் நடித்தால் அது தமிழில் வெளியாகும் போது வியாபாரத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம். சூர்யாவிற்கு தெலுங்கிலும் ஓரளவிற்கு வரவேற்பு உள்ளதும் அதற்கு ஒரு காரணமாம். அதனால்தான், 'பாகுபலி' தமிழ் டிரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொண்டார் என்கிறார்கள். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.