ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுகிறோமோ அல்லது தோல்வி அடைகிறோமோ அது எப்போதும் எங்களை பாதிக்கப்போவதில்லை. மாற்றத்தை ஏற்படுத்தவே தாங்கள் களம் இறங்கியுள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஜூலை 15ம் தேதி, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அந்த தேர்தலுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் உத்தரவு குறித்து, தனியார் டி.வி. சேனலுக்கு, நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,
ஜூலை 15ம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்க தேர்தலுக்கு, ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்திருப்பதே, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.
எங்களுக்கு தேர்தலில் வெற்றி முக்கியமல்ல. மாற்றத்தை நிச்சயமாக உருவாக்குவதற்காகவே, இளம்நடிகர்கள் எல்லாம் ஒன்றிணைந்து இங்கு களம் இறங்கியுள்ளோம்.
மதுரை நாடக நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டித்தருவோம் என்று அவர்களிடம் உறுதியளித்தபடி நிச்சயம் நிறைவேற்றுவோம். இதற்கும், தேர்தலுக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அடுத்த மாதத்தில், இந்த கட்டடம் கட்டுவதற்கான பணிகள் உறுதியாக துவங்கும். இதற்காக, இளம் நடிகர்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல், ஒரு படத்தில் நடித்துக்கொடுக்க உள்ளோம். இந்த பணத்தை கொண்டு, நாடக நடிகர்களின் வசதிக்காக, புதிய கட்டடம் கட்டப்படும்.
நடிகர் சங்க தேர்தல் பணிகள் நிறுத்தம்
ஜூலை 15ம் தேதி நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, தேர்தல் பணிகள் உடனடியாக நிறுத்தப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ் கூறியுள்ளார்.
சென்னையில், பத்திரிகையாளர்களை சந்தித்த செல்வராஜ் கூறியதாவது, தேர்தலுக்கு, ஐகோர்ட் தடை விதித்துள்ளதையடுத்து, தேர்தல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும்வரை, தேர்தல் பணிகள் எதுவும் நடைபெறாது. இன்று வேட்புமனு துவங்க இருந்தநிலையில், 11 பேர் வேட்புமனு வாங்கிச்சென்றுள்ளபோதிலும், ஒருவர் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறினார்.