ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் ரஞ்சித் சங்கர், மலையாளத்தில் கடந்த வருடம் மம்முட்டியை வைத்து இயக்கிய 'வர்ஷம்' படம் அவரின் வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தியது. ஒரே மகனை இழந்துவிட்ட சோகத்தில் முடங்கிவிடாமல் அடுத்து பெற்றோர் செய்யவேண்டியது என்ன என்கிற சமூகப்பார்வையை அதில் காட்டியிருந்தார் ரஞ்சித். இதில் மட்டுமல்ல, இவர் இயக்கத்தில் மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன்பு 'பாஸஞ்சர்' என்கிற படம் வெளியானது. தினசரி ரயில் பயணத்தின்போது தான் சந்திக்கும் யாரோ ஒருவருக்கு ஆபத்து என்றதும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அவரை காப்பாற்ற கிளம்பும் ஒரு பயணியும், அவருக்கு துணையாக வரும் ஒரு டாக்ஸி ட்ரைவரையும் வைத்து, சமூக உணர்வுடன் மனித நேயத்தின் உச்சத்தை படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் ரஞ்சித் சங்கர்.
தற்போது 'மேட் பார் ஈச் அதர்' என்னும் பெயரில் லவ் ஸ்டோரி ஒன்றை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ரஞ்சித் சங்கர் இந்தப்படத்தில் ஜெயசூர்யாவை கதாநாயகனாக்கியுள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய 'புண்யாலன் அகர்பத்தீஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவரும் ஜெயசூர்யா தான். இதுநாள் வரை யாரோ வாழ்ந்து மறைந்த ஒருவரின் வாழ்க்கையை உண்மைக்கதி என ர்டுக்கும் பாணியில் இருந்து விலகி, தான் நீண்ட நாட்களாக பார்த்து வரும், தனது நண்பனின் கதையையே படமாக இயக்குகிறார் ரஞ்சித் ஷங்கர். காரணம் தனது நண்பனின் வாழ்க்கை சினிமாவாக வெளியுலகினருக்கு தெரியவேண்டிய அளவுக்கு அறுபுதமான மனிதர் என்கிறார் ரஞ்சித் ஷங்கர்.