மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சல்மான்கான் நடித்த வீர் படத்தை தயாரித்தவர் விஜய் கலானி. படம் தயாரிப்பதற்கு முன்பு சல்மான் கானுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தார். படம் வெளியான பிறகு அதன் லாபத்திலிருந்து 15 கோடி சல்மானுக்கு சம்பளமாக வழங்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடி லாபம் ஈட்டவில்லை. இதனால் தயாரிப்பாளர் சல்மான்கானுக்கு மீதி 15 கோடியை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சல்மான்கான் அந்த ஒப்பந்தம் செல்லாது எனக்கு தரவேண்டிய 15 கோடியை பெற்றுத் தரவேண்டும் என்று இந்தி நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த நடிகர் சங்கம் தயாரிப்பாளர் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறிவிட்டது. இதனை எதிர்த்து சல்மான்கான் மேற்கிந்திய சினிமா சங்கத்தில் புகார் செய்தார். இந்த சங்கம் சல்மான்கான் பக்கம் நியாயம் இருப்பதாக கூறியதோடு தயாரிப்பாளர் விஜய் கலானிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற முடிவை அறிவித்தது. இதனை இந்தி நடிகர் சங்கம் ஏற்கவில்லை.