ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஆரம்ப காலத்தில் நிறைய மலையாள படங்களில் நடித்து வந்தார் கமல்ஹாசன். கடைசியாக கடந்த 1989-ல் அவர் ஹீரோவாக நடித்த மலையாளப் படம் 'சாணக்கியன்'. இப்படத்தை தொடர்ந்து 2010-ல் வெளியான 'ஃபோர் ஃப்ரெண்ட்ஸ்' என்ற மலையாளப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் கமல்ஹாசனாகவே நடித்துள்ளார். அதன் பிறகு மலையாளப்படங்களில் நடிக்காத கமல் விரைவில் ஒரு மலையாளப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
மலையாளத்தில் இருந்து தமிழில் ரீ-மேக் ஆன 'சென்னையில் ஒரு நாள்', '36 வயதினிலே' போன்ற படங்களின் கதையை எழுதிய பாபி, சஞ்சய் என்ற இரட்டையர்கள் கதை எழுதுகின்றனர். இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கிய 'மும்பை போலீஸ்' உட்பட இவர்கள் கதை எழுதிய பெரும்பாலான மலையாள படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன!
'டிராஃபிக்' மலையாளப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோது பாபி, சஞ்சயை சென்னைக்கு அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் 'டிராஃபிக்' படத்தை தமிழில் ரீ-மேக் செய்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்! அப்போது அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது.
தற்போது தனக்கு மலையாள படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் அதற்காக ஒரு கதையை தயார் செய்யவும் பாபி, சஞ்சயிடம் சொல்லியுள்ளார் கமல்ஹாசன்.
இந்த தகவலை, சமீபத்தில் பிரபல மலையாள பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள பாபி, சஞ்சய் இருவரும் கமல்ஹாசனுக்காக தயாராகி வரும் கதை மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளுக்கும் ஏற்ற கதையாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள்.